ஒருவனுக்கு தாமும் தன்னாலான தான தருமத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது.
அடுத்த நாளிலிருந்து தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்ய ஆரம்பித்தான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் மனைவி “தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்வதால் யாருக்கு என்ன லாபம்? தினம் கடுகளவு தங்கம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க.. மொத்தமாகச் சேர்ந்ததும் அதை உருக்கி யாருக்காவது கொடுக்கலாம்,” என்றாள்.
மனைவி பேச்சைக் கேட்டு அவனும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். கடுகு சைசிலிருந்த தங்கம், போகப்போக விளாம்பழ அளவுக்கு அதிகமாகிக் கொண்டே போனது. அவ்வப்போது உருக்கி உருண்டையாக்கிக் கொண்டே வந்தான்.
ஒருநாள் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தான். பேச்சு வரவில்லை.
தான் இறப்பதற்கு முன்பாக அந்தப் பொன் உருண்டையை யாருக்காவது தானமாக்க கொடுத்துவிட விரும்பினான்.
தன் விருப்பத்தை அவன் தன் மனைவிக்கு சைகை மூலம் தெரிவித்தான்.
அவன் சொல்வது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் அவ்வளவு பொன்னை தானமாகக் கொடுக்க அவளுக்கு மனமில்லை.
“அப்பா என்ன சொல்கிறார்?” என்று மகன்கள் கேட்க, அவளும் சாமர்த்தியமாக “உங்க அப்பாவிற்கு விளாம்பழம் சாப்பிட ஆசையாக இருக்கிறதாம்..” என்று கூறி மழுப்பினாள்.
உடனே மகன்களும் வாங்கி வந்து, அப்பாவுக்கு ஊட்டினார்கள். மனைவியின் துர் எண்ணம் புரிந்தது. மறுக்காமல் சாப்பிட ஆரம்பித்தான். விளாம்பழம் தொண்டையில் சிக்கி அவன் இறந்தே போனான்!
Category: ஜென் கதைகள்
No Comments